Saturday, February 23, 2008

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

நான் பெற்ற பேரின்பத்தை இந்த உலகத்தில் உள்ள யாவரும் பெறவேண்டும்.ஆகாயம் போன்று எல்லையற்று விரிந்த மறைபொருளான சிவனைபற்றி சொல்வதென்றால் உடலால் கிடைக்கபெற்ற உணர்வூடன் கூடிய மந்திரத்தை திரும்ப திரும்ப முயலுவதால் கிடைக்கபெறும்

சிவ பெருமானின் அடிமுடி காணல்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே


அயன் - பிரம்மன்
மால் - திருமால்

இருவரும் சிவனின் அடிமுடி அறியாமல்
மீண்டும் பார்மிசை கூடி - பூவுலகில் கூடிபின்
அச்சுதன் என்ற திருமால் கூறினார் என்னால் அடி காண இயலவில்லை என்று
முடி நோக்குற்றேன் என (அயன் பொய்மொழிந் தானே)) பிரம்மா கூறினார்

Saturday, November 24, 2007

திருந்து தேவன்குடி - Thirundhu Devangudi

மருந்து வேண்டில்லிவை மந்திரங்கள்ளிவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்ளிவை
திருந்து தேவன்குடி தேவர் தேவெய்திய
அருந்தவத் தோர்தொழு மடிகள் வேடங்களே.

Saturday, November 3, 2007

சைவ சமயம் - வினாவிடை

கடவுள் இயல்

உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

இறைவன்.

இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

சிவபெருமான்.

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.

சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.

மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.

Friday, October 12, 2007

திருக்கோத்தும்பி

திருச்சிற்றம்பலம்

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

திருச்சிற்றம்பலம்
=========================================
The king over the flower (brahma), indra,
graceful lady on the tongue (saraswati),
nArAyaNa, four vedas, the light that rides bull
(rudra), celestials - the Perfect Feet that rides bull
that is not known by all of them, to That go
and blow, oh king bee!

Saturday, October 6, 2007

பதஞ்சலி யோகம்

கக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.

இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள சிதம்பரம்.

யோக சூத்திரங்கள் 1]சமாதி , 2]சாதனை, 3]விபூதி, 4]கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது

விபூதி

சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டியது விபூதி.
பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு வெள்ளை நிற விபூதி.
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்

திருசிற்றம்பலம்

ஸ்ரீ குருஞானசம்பந்தர்

ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினைப்பாய் - சீசீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்

Saturday, September 29, 2007

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை

Thiruvembavai - 6
=================

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கிநம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடியகழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான சிவபெருமானைப் பாடு !

Tuesday, September 25, 2007

நம்மாழ்வார்

ஆழ்வார் திருநகரில் பிறந்தவர். 1010 பாடல்கள் பாடியுள்ளார். நம்மாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
இவரது பாடல்கள் பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாய் மொழி, திருவாசிரியம் ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளன.

For further details:
http://www.divyadesamonline.com/alwars/namm-alwar.asp

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Monday, September 10, 2007

११.०९.२००७ Strategy

Buy more Nifty @ 4510-4530 level for a target of 4600/- and our revised stop loss @ 4470/- (Closing basis)
Buy Auropharma @ Rs 618-622 range for a target of Rs 640/-
Buy GDL @ 133/- for a target of Rs 138/- with SL 131/-

Saturday, September 8, 2007

१०-०९.२००७ Strategy

Buy Nifty in bulk at the Opening Bell with a SL 4420 closing basis for a target of 4570.

Buy Orchid Chemical @ Rs 210 - 213 for a target of Rs 222/-
Buy Hind Unilever @ Rs 210 -212 for a target of Rs 220/-

Belivers' Best: Surya Pharma / GDL

Wednesday, September 5, 2007

०६.०९.२००७ Strategy

Expected to open Gap down Nifty opening.
Buy Nifty at opening for a target of 4500/
Buy Auropharma @ Rs 622-626 range for a target of Rs 640/-
Buy HCC @ Rs 132/- for a target of Rs 139/- with SL 130/-
Accumulate Surya Pharma at every dip for the prosperous future (It may touch Rs 500/-in 3 years) .

Tuesday, September 4, 2007

०५.०९.२००७ Strategy

Buy Andhra Bank @ Rs 86.75 for a target of Rs 92.
Buy Surya Pharma @ Rs 85/- for a target of Rs 135/- within 2 months